Friday, October 31, 2014

இன்றொரு பொழுது



இன்றொரு பொழுது ஓடிவிடாத
இன்றும் அதே எதிர்பார்ப்புடன்.
நிறை இல்லா வயிறுடன்
காலம் கடத்துகிறேன்
எதையோ எதிர்பார்க்கிறேன் .

எதிர்பார்ப்புகள்தான் வாழ்க்கையா ?

காதல் சொல்லவா

கால்கள் இடற
கைகள் பதற
காதலை சொன்னேன்

வல்லேன சிரித்துவிட்டாள்
வில்லம்பு புருவத்தில் எனை
சறுக்கி விழவைத்தாள்

கடந்து சென்றாள்
காலம்கடக்க
காத்திருந்தேன்
கவிதைகளாக.


Wednesday, October 29, 2014

சிறுபுள்ளி



பெரும்புள்ளிகள் மத்தியில்
சிறுபுள்ளி நான்
சீறும் புள்ளியும் நான்

Monday, October 27, 2014

நான் உன்னை காதலிக்கிறேன்

 

மீண்டும் குறுஞ்சி பூ பூத்துவிட்டது
நான் உன்னை காதலிக்கிறேன் என்பதற்குள்

Sunday, October 26, 2014

புது உணர்வு

தோள்களில் சிறகு முளைத்து
கனவுகள் பறக்கட்டுமே

விண்வெளி போய்சேர்ந்து
ஒளி ஆண்டுகள் கடகட்டுமே

எல்லை என்பதே இல்லை
தொலைவு என்பதே தூரம்மில்லை        (தொலைவோ தூரமில்லை)

to be continued

Tuesday, October 21, 2014

அப்போ இப்போ எப்போ

அப்போ இப்போ எப்போ
அப்போ இப்போ எப்போ
அப்போ இப்போ எப்போ (Rap)

to be continued.........

Saturday, October 18, 2014

நீ நிறையாகிறாய்



மேகம் நீ
மழையால் என்னை நனைக்கிறாய்

பூக்கள் நீ
தேனால் என் தாகம் தீர்க்கிறாய்

காதல் நீ
காமத்தால் என்னை ஆள்கிறாய்

மரணம் நீ
துயரத்தால் என்னை தவிக்க விட்டாய்

கடவுள் நீ
கருணையால் எனக்கு மோட்சம் தந்தாய்

நான் நீ
என்னுள் என்னை நிறைசெயகிறாய்

Wednesday, October 15, 2014

புதிய பாதையில்



நெடுங்காலம் காத்திருந்தோம்
சிறிய பயணம் முடிவுக்கு வந்தது

தொடக்க நிலையில் மீண்டும் நாம்
தொடருவோம் நம் பயணத்தை
புதிய பாதையில் ......!



Wednesday, October 1, 2014

வாடிய பூக்கள்








வாடிய பூக்களை
வண்டுகள் மொய்ப்பதில்லை

 மகரந்தசேர்க்கை இல்லாமல்
கணிகள் காய்ப்பதில்லை

பிள்ளை இன்றி பெண்
(பெண்மைப்) முழுமைப்பெருவதில்லை