Tuesday, December 30, 2014

இலவு இழவு

அவள் ஒரு இலவு காத்த கிளி
என்னை
இழவு எடுத்த கிளி



Translation
Ceiba petantra =  இலவ மரம்
Parrot = கிளி
Death = இழவு

Friday, December 26, 2014

உள்ளே அவள் ஒளி

உள்ளுக்குள்ளே இருக்கிறாள்
உடனே பயணிக்கிறாள்
பனி போர்வைக்குள்
பின்னி பினைகிறாள்

தழைக்கிறாள் வளர்கிறாள்
மலர்கிறாள்

வேர்கள் தொடுத்து
கிளைகள் படர்ந்து
என்னை தன்
பசுமைக்குள்
ஆட்கொள்ளுகிறாள்


Sunday, December 21, 2014

எங்கோ போகிறேன்

வீடு தாண்டி போகிறேன்
வீதி உலா போகிறேன்
எங்கோ போகிறேன்

Friday, December 19, 2014

நேசிக்கும் உயிர்கள்

என் அறையில்
உள்ள நுண்ணிய உயிர்கள்
கூட என்னை நேசிக்கும்
என் காதலியை தவிற

Thursday, December 18, 2014

வர்ணம்



தரம் கேட்டவன்
தகுதி யற்றவன்
தன்னிலை பாராதவன்
தற்போக்கன்
தாழ்த்தபட்டவன்

பசியற்றவன்
பஞ்சம்மில்லாதவன்
பஞ்சாங்கம் பார்ப்பவன்
பரலோகம் செல்பவன்
பார்ப்பனன்

இயல்பினால் வர்ணம் உண்டாகும்
பிறப்பினால் வர்ணம் பிரிவாகும்

பூஉலகில் வாழ்க்கை ஒன்றாகும்
ஒற்றுமை நன் நெஞ்சில் நின்றாடும்
வேற்றுமை உம் மரணம் கொண்டாடும்

புரிந்தால் மனிதம் காத்துவிடு
ஜாதியை துறந்துவிடு
சந்ததியை மனிதனாய் வளர்த்துவிடு



Krishna Kumar G

Tuesday, December 16, 2014

எழுத்தில் இளமை

எழுத்தில் கூட ஒருவகை இளமை தேவைபடுகிறது..........
கவர்ந்திழுக்க ..........!  


Monday, December 15, 2014

ஐ யாலே


(Art by Myself)

ஒரு பெண்ணாலே வீனானேன்
அவள் கண்ணாலே நோவானேன்

சிறு பொய்யாலே
(அவள்)
சிற்பம் செய்தேன்

என் கையாலே
(அவள்)
நுட்பம் கொய்தேன்

வண்ணம் ஏழு தீட்டிகொண்டேன்
வலை பின்னலுக்குள் மாட்டிக்கொண்டேன்

இவன் தன்னாலே தன்னில் தானா
தன்னிலை தின் தின் தானா
திம் துதில் நெஞ்சில் தானா

ஐ யாலே அவளும் நானா
ஒளிக்குள் ஒலி
வடிவம் தானா
நம்மில் அது படரும்தானா
எமக்குள் திம் திம் தானா
சொல்லலே சொல்லாமல் சொன்னாலே
அது காதல் தானா ......?

Tuesday, December 9, 2014

மைய புள்ளி



நான் ஒரு மைய புள்ளி
என்னை சுட்ரும் கிரகங்கள்
என் விசை கடப்பதில்லை (கடப்பதுமில்லை)
என் அருகில் வருவதுமில்லை

நான்
நெகிழ்வதுமில்லை
நோடிவதுமில்லை
மறைவதுமில்லை

ஒளிர்கிறேன்
இருளை அகற்ற
வளர்கிறேன்
இன்னுலகம் போற்ற

Wednesday, December 3, 2014

கேள்விகள்தானோ ?



மகரந்தம் மணக்கிறது மலர்தானோ ?
துளிகள் விழுகிறது மழைதானோ ?
மரபணு மாறுகிறது காமம்தானோ ?
==================================

வாழ்வியல் தத்துவம் காதல்தானோ ?
கேள்விக்கு விடை பதில்தானோ ?
இல்லையென்பது இங்கு ஏனோ ?

கொஞ்சம் என்னை கவுணி



கொஞ்சம் எட்டி எட்டி பாக்குறேன்
தப்பு தப்பா பேசுறேன்

to be continued..........