Wednesday, August 31, 2016

பொல்லாத பெண்ணே

(இந்த பதிவு எனது மறு ஆய்வுக்கு உட்பட்டது)

பொல்லாத பெண்ணே
உனக்கு என் முகம் தெரியாதா
உன்னை நான் காதலிப்பது
புரியாதா

கையோடு கைகோர்க்க
விம்புகிறேன்
என்பதை அறிந்தும்
காதலுக்கு
கைவிளங்கு புட்டுகிறாய்

தனியே தன்னந்தனியே
நிற்கின்றேன்
உன்பக்கம் வர தவிக்கிறேன்
தனியே
உன் சமிக்கைகளை காட்டு
வருகிறேன்
அன்பே
உன் அசைவுகள்
இனிதே
நம் காதலும்
இனிதே

செல்லக் குட்டி

தானே தன்னனனா தனே தனனா தானே நன்னா
வாடி செல்லக் குட்டி
சும்மா வருவேன்
உன்ன சுத்தி
தானே தன்னனனா தனே தனனா தானே நன்னா


to be continued

Monday, August 22, 2016

ஏய் ஜிகினா ஜாக்கெட்டு

என்னை  காலம் துரத்த
நான் ஓட
ஒரு வளைவில் திரும்பியபோது
என் மார்பிலே மோதியது
ஒரு
ஜிகினா ஜாக்கெட்டு
அவள் கிழே விழாமல் இருக்க
இறுக்கி அனைத்து கொண்டேன்
பிறகு விட்டுவிட்டேன்
ஆனால் அவள் வாய் விடவில்லை
போடா நாய்யே பண்ணி
கண்ணு தெரியல
பொறுக்கி
என்றது

மன்னித்து விடு
என்றேன் மூச்சி இறைக்க
அவள் மார்பை அனைத்து
கிழே குத்த உட்கார்ந்தாள்
சுற்றும் முற்றும் பார்த்தேன்
யாரும் உதவிக்கு இல்லை
நானே தோளை பிடித்து தூக்கினேன்
என் கையை உதறி விட்டு எழுந்தாள்
என்னை முறைத்து பார்த்தாள்
நான் தலை நாணி
என் மீது மோதிய அவள் மார்பை பார்த்தேன்
அது நலம்தான் என்று புரிந்தது...
அவள் முகம் கூட சரியாக பார்க்கவில்லை
அவளை கடந்து
என் ஓட்டத்தை தொடர்ந்தேன்

ஏய் ஏய் என்று
என் பின்னால்
அவள் கத்தும் சப்தம்
மாட்டும் கேட்டுகொண்டே இருந்தது
மீண்டும் திரும்பி
அவளை
பார்க்கவே இல்லை





உலகானவள்

துருக்கி தெருக்களில் என்னை  துரத்தியவள்
டோக்கியோ செர்ரி மரங்களின் கீழ் தோள்களில் சாய்ந்தவள்
பாரிஸ் சதுக்கத்தில் இதழ் பதித்தவள்
அல்ப்ஸ் மலை காற்றோடு சுவிச்சர்லாந்தில் என்னோடு இணைந்தவள்
ஆங்கில கால்வாயை எனக்காக நூறு முறை கடந்தவள்
சோமாலியாவின் வறுமையை கண்டு என்னிடம் புலம்பியவள்
எகிப்த்தின் மம்மிகளை சிலுவையிட்டு வணங்கியவள்
நார்வே இரவுகளில் வடக்கு திசையில் தோன்றும் அரோராக்களை கொடிட்டு ரசித்தவள்
லாஸ் வேகாஸ் கேளிக்கை விடுதிகளில் தூங்க விடாமல் செய்தவள்
(தற்போது)
இந்தியாவின் கூவத்தில் என்னை கரம் பிடிக்க விரும்புகிறாள்


Sunday, August 21, 2016

என்னை சுட்டுத்தள்ளு

எனக்கான தோட்டா
உங்கள்  துப்பாக்கிகளில்
லோட் செய்யப்பட்டுள்ளது

அது என் நெற்றிபொட்டிற்க்கா
அல்லது  என் இதயாத்துக்கா
என்பது
ட்ரிகரை அழுத்தும் கை விரலுக்கும்
குறிப்பார்க்கும் கண்களுக்கும் தான்  தெரியும்

நான் ஏற்கனவே பார்த்து  பழகிய
கண்களும்
நான் ஆற தழுவிய கைகளும்
தான்
என்னை இன்று
 சுடுகிறது



Sunday, August 14, 2016

சொற்களை விற்ப்பவன்

என் இதயம் என்ன இருட்டறையா ?
அணையா விளக்கை ஏற்றுகின்றேன்

என் செவிகள் கேளாத ஒலிஅழி கூடமா ?
இசைகள் இசைத்து பாடல்கள் படிக்கின்றேன்

என் கண்கள் ஒழுக்கமற்ற குருட்டுப்பார்வையா ?
பிறர் வாழ்வில் ஒளிவிசும் ஒளி மரங்களை நடுகிறேன்

நான் அநியாயங்களை தட்டி கேட்காத மவுனியா ?
வசை வீசும் சொற்களை வாய்ஜாலத்தால் திசை மாற்றி விடுகிறேன்

கேலி சிரிப்புகளை உள்வாங்கி கொள்கிறாள்
அழுகிறேன் நெகிழ்கிறேன் புகழ்கிறேன் மகிழ்கிறேன்

வாழ்வில்
உள்ள வலிகளை 
உள்ளே சுமந்து 
வெளியே
அவரவர் தேவைகேற்ப்ப
விலையில்லா
சொற்களை
இலவசமாய்
விற்கிறேன்           (விநியோகிக்கிறேன்)

கவிதையாக 


Friday, August 12, 2016

தனியே பேச வந்தேன்

தனியே பேச வந்தேன்
நீ கேளாததால்
பொதுவில் ஓர் பாடலாய் பாடுகிறேன்

அதை சொல்லத்தான், நெஞ்சினில் நூறு ஆசைகள்
அதை சொல்லாத போது உள்ளே நெஞ்சம் நொறுங்கி விழும் ஓசைகள்

தனியே பேச வந்தேன்
நீ கேளாததால்
பொதுவில் ஓர் பாடலாய் பாடுகிறேன்

ஓர் நதியே என் தாகம் தீர்த்திடாத போது
ஓர் குவளை நீர் அதை செய்திடுமோ

நீங்காத எண்ணங்கள் நெடு நாட்கள் உண்டு
மகரந்தம் மனம் வீசிட அதை நெருங்காதோ
மலர் மொக்கும் வண்டு

தீராத ஆசைகள் எனக்கென்றும் உண்டு
நீ வந்து தட்டினால் திறக்காதோ எந்தன் கதவு

நெடுதூரம் பயணித்து வந்தேனம்மா
உனக்காக காத்து நிற்கும் ஓர் பாடல் நான்.



Wednesday, August 3, 2016

காதல் கோள்கள்

செழிப்பான பூமிக்கோ நிலவின் மீது காதல்
வறண்ட  நிலவுக்கும் பூமியின் மீது காதல்

இடையே ஆகாய இடைவெளி தடை போட்டாலும்
இரவில் நிலவு காதலை ஒளியால் ஒளிர்விடுகிறது

அதை தினம்தோறும் ரசிக்கும் பூமி
கவிதைகளாய் சொல்லி நிலவை புகழ்கிறது..

தொலைவிலிருந்து இதை கவனிக்கும் சூரியனுக்கோ
வயட்றேரிச்சல்
பகலில் வெப்பத்தால் இருவரையும் சுட்டெரிக்கிறது

பகலிலே பயந்து மறைந்து தொலைந்த நிலவு
மீண்டும் இரவில் தோன்றி உனக்காக நான் இருக்கிறேன் என்பதை பக்குவமாய்
பூமிக்கு மென் ஒளியால் வெளிபடுத்துகிறது


மிகவும் பிடிக்கும்

விடிந்த பிறகும் முடியாத கனவுகள்
துரத்திவரும் நினைவலைகள்
தூக்கத்தை துலைத்த இரவுகள்
எல்லாம் என்னை பிடித்துகொண்டது
என்னை மிகவும் பிடிக்கும் என்று
காற்றோடு அவள் காதலை (தமிழில்) பதிவு செய்திட்ட பிறகு.. :)