Sunday, April 24, 2016

அனல் காற்றே

என்னை நொறுக்கும் அனல் காற்றே
என்னை வஞ்சிப்பதால் என்ன பயன்

ஒரு கையில் விஷமும்
மறு கையில் அமுதும்
ஏந்தி நிற்கிறாய்
இரண்டையுமே
எனக்கு தந்துவிட
மறுக்கிறாய்

கடும் வெப்பத்தால்
என்னை சுட்டெரிக்கிறாய்

உன் கோப கணைகளை 
சற்று குறைத்துகொள்

நான் உனக்கு செய்த
தீங்கு என்ன ?