Sunday, October 30, 2016

தெளிந்த பிரதிபலிப்பு

தெளிந்த நீரோடை போல் இருக்கும்
என் உள்ளம் பார்த்தும்
அவளுக்கும் தெரியவில்லை ...
அவள் முகத்தின் பிரதிபலிப்பை தவிர
வேறொன்றும் இல்லையென்று .



Thursday, October 27, 2016

சாதனை படைத்தேன்

கொடுக்க காத்திருந்த
முத்தங்களை தொலைத்தேன்
கை பிடித்து இழுத்த
காமத்தை தொலைத்தேன்
இதயத்தின்னுள் புகுந்த
காதல்களை தொலைத்தேன்
தோள்கொடுத்த
தோழமைகளை தொலைத்தேன்
தேடி வரும்
தூக்கங்களை தொலைத்தேன்

என்னை வதைத்தேன்
அயராது உழைத்தேன்

பலன்களை எதிர்பாராததால்
என்னையே தொலைத்தேன்

தொலைந்த இடத்தில்     (தடத்தில்)
சாதனைகள் படைத்தேன்




Wednesday, October 26, 2016

வேதமும் எதிர்மறையும்

வேதங்களுக்கு எப்பொழுதும் எதிர்மறைகள் உண்டு
எதிர்மறைகள் வரும் என்று அறிந்தே தான்
அதற்க்கேற்றார்போல்
வேதங்கள் முன்கூட்டியே சரிவர
திட்டமிட்டு எழுதப்பட்டு இருக்கிறது.
வேதங்களை முழுவதும் ஆராய்ந்து அறியாமல்
வெளியே இருந்துகொண்டு
ஒரு வரியை மட்டும் பிடித்துகொண்டு
குறை கூறுவது அபத்தம்


பறிகொடுத்த வாழ்வு

என் இழப்பை எல்லாம்
அவள் சரிகட்டுவாள்
என்றிருந்தது தவறு

அப்படி இருந்த படியால்
என்னுள் மீதம் இருந்ததையும்
அவள்
பறித்து சென்றுவிட்டாள்

பறிகொடுத்ததை
மீட்க சென்ற போதுதான்
தெரிந்தது
ஏற்க்கனவே என்னைப்போல்
பறிகொடுத்தவர்கள்
வரிசையில்
நானும்
ஒருவன் என்று


கற்பூர காம ராஜாக்கள்

 முன்பு இணைய தளங்களில்
தேடி தேடி
காம கதைகள்
வாசித்தவர்கள் தான்
இன்று
சமுகவளைதலங்களில்
பக்தியின் மார்க்கம்
நெறியாளர்களை போல்
கற்பூர தீபம் ஏற்றுகிறார்கள்

இது யாரை
காமத்தில் கவுக்க
அவர்கள் போடும்
வேஷம் என்று

தெரியவில்லை


அகங்கார சோதனை

முதலில் கெஞ்சி பார்த்தாள்
பிறகு கொஞ்சி பார்த்தாள்
அதன் பிறகு பழகி பார்த்தாள்
பிறகு அதிகாரம்  செய்து பார்த்தாள்
அதன் பிறகு ஆணவம் கொண்டு பார்த்தாள்

இது வழக்கமாக பெண்கள்
கையாளும் யுக்தி என்பதால்
நான் எதற்கும் அசரவில்லை
ஒரே  நிலையில் தான்  இருந்தேன்
சொல்லபோனால்
இன்னும் அதிகமாக
அவளிடமிருந்து எதிர்பார்த்தேன்
ஆனால் அவளால்
இந்த சிறு சோதனைகளையே
தாக்குபிடிக்க முடியவில்லை

பிறகு என்னை வெறுத்து பார்த்தாள்
பதிலுக்கு நானும் வெறுத்துவிட்டேன்

காரணம்
அவளிடம்
சந்தர்ப்ப சூழ்நிலைக்காக வந்த காதலே
இருந்ததே தவிற
உண்மையான காதல் இல்லை
என்று முடிவில் தெரிந்து கொண்டேன்

இருந்த போதும்
நான் அவளை காதலிக்கவில்லை
என்று அர்த்தமில்லை
அவளை
மனதார காதலித்தேன்
ஆகவே சோதித்தேன்

சோதிப்பது தவறு  இல்லை
சோதித்த பின் தான் தெரிந்தது
நான் சோதித்தது
தவறாக போகவில்லை என்று

பல பாடுகள் கடந்து
உடைந்து மெலிந்து

அவள் தற்பொழுது
என்னை காதலிக்கிறாள்
என்னை தாண்டி காதலிக்கிறாள்






Saturday, October 22, 2016

வார இதழ் கவி விற்ப்பவன்

வாரா அன்புகளை எல்லாம் கட்டி இழுத்து
கவலைகளை எல்லாம் கவிதைகளாக வடித்து
வார ஏடுகளின் காகிதங்களில் வார்த்தெடுத்து
விற்ப்பனைக்கு அனுப்பிய பின்
அதை எழுதியவனே
வாரம் தோறும் ஏலம் போல் கூவி கூவி விற்கிறான்
அதில் என்ன இருக்குமோ என
வாஞ்சையில் வாங்கியவர்கள்
அதன் வாசத்தை நுகர்ந்துவிட்டு
( அதில் அடித்த பழைய புடவையின் வாசத்தை கண்டுகொண்ட பின் )
வேண்டா வெறுப்பாய் அதை பரணின்மேல்
தூக்கி எறிகிறார்கள்
நானும் படித்தேன்
தாங்கள் வடித்த கவிதைகளை
என பெருமையாக
போடிப்போட்டுக் கொண்டு
அதை எழுதிவனுக்கு
பாராட்டுகளால்
பதில் எழுதி
பெருமை சேர்கிறார்கள்.
அவனும் அதை
ஒரு உந்துதலாக கருதி
உற்சாகமாய்
தொடர்ந்து அதேபோல்
வாரம் வாரம்
எழுத்துகளால் எழுதி
நம்மை சாகடிக்கிறான்


Thursday, October 20, 2016

உன்னை காண வருகிறேன்

மலரே சிறு மலரே
உன்னை காண வருகிறேன்

புருவங்கள் மத்தியில்
வட்டமிடும் காய்ந்த நிலவுகளுக்கு துணையாக
நெற்றிச் சுட்டி செய்து வருகிறேன்

வெறும் கழுத்துக்கு
கொத்து கொடி தாலிக்கொடியால்
மாலைகள் செய்து வருகிறேன்

கந்தல் உடை மறைத்த கைகளுக்கு
கொந்திக்காய் பூ காப்பு
மோதிரம் செய்து வருகிறேன்

உளை ஊனிய கால்களுக்கு
அத்திக்காய்க் ஆலங்காய்க் கொலுசும்
 தாழ் மெட்டியும் செய்து வருகிறேன்
 

வந்து
என்  அரைஞாண் கயிட்றை
உன் கரம் இழுத்து பிடிக்க செய்து
உன் வெட்கிய முகம் பார்த்து
என் காதலை சொல்ல போகிறேன்





Wednesday, October 19, 2016

பண்டிகை

பண்டிகைகள் ஏன் கொண்டாடப்படுகிறது
பண்டிகைகள் ஒரு மகிழ்ச்சியின் வெளிபாடு
அப் பண்டிகையின் நோக்கம் எதுவாகிலும்
அதில் ஒரு ஆனந்தம் நிறைந்திருக்கும்

பசித்த வெறுத்த கண்களுடன்
பார்க்கும் ஏழைகளுக்கு அது
ஏக்கம் நிறைந்ததாய் இருக்கும்

இந்நிலை மாறட்டும்

இருப்போர் இல்லாதோருக்கு பண்டிகைகளில்
அன்பாய் பரிசுப்பொருட்களை தரட்டும்

பண்டிகை என்பது பகிர்தல்
மகிழ்ச்சியை பகிர்தலாக இருக்கட்டும்


Tuesday, October 18, 2016

காதல் பிரிவு

தீராது காதல் தாகம்
தீயில் வேகுது
திமிர் கொண்ட தேகம்

என்னை இழந்து
உன்னை சுமந்து செல்கிறேன்  (நிற்கிறேன்)
(அல்லது)
(என்னை உன்னிடமிழந்து, உன்னை என்னுள் சுமந்து செல்கிறேன் )

நரக வேதனையில்
நகரும் நேரங்கள் மனதை நொறுக்குகிறது     (நோருக்குதே)



முன்பு நெஞ்சில் (இதயத்தில்) இதழால் பச்சை குத்திய நினைவுகள்
பின்பு பிச்சை கேட்டு அதை கத்தியால் கீறி அழிக்குதே (குதறி தள்ளுதே)
என்ன செய்வேன் என்னை என்ன செய்வேன்
காதல் (காதலே) என்னை கொல்லுதே என்ன செய்வேன்   (ஆண்)



உன்னை ஏன் பார்த்தேன் ,
பார்த்ததும் என்னை ஏன் துலைத்தேன்
ஏனோ ஏனோ தெரியவில்லை
இன்று நான் படும் வேதனைகள்
உனக்கு ஏன் புரியவில்லை   (ஆண்)

காதலில் சிறு பிரிவு என்பதே
மீண்டும் சேர்வதற்காக தானே
காத்திருந்தால் தெரியும்
இந்த அன்பின் வலி புரியும்  (பெண்)



( நிஜத்தில்
ஆரா காதல் காயம் செய்து
கனவில் வந்து
மயில் இறகால்
மருந்தை தடவுவது ஏனோ )  (ஆண்)

பூவை விட்டு விழுந்த இதழ்கள்
மீண்டும் இணைவதில்லை  (ஆண்)

காற்றில் ஒடிந்த கிளைகள்
மீண்டும் துளிர்ப்பதில்லையா   (பெண்)



வேண்டாம் இந்த காதல் வேண்டாம்
வேதனையில் வேள்வி செய்யும் இந்த நிலை வேண்டாம்  (ஆண்)


வாடை காற்றே
உனக்கு புரியவில்லையா

நானும் நொடிவது
உனக்கு தெரியவில்லையா  (பெண்)

காத்திருக்கிறேன்
காலம் கரையும் வரை
காத்திருக்க வைக்கிறேன்

காதல் கண்ணீரில் கரையாமலிருக்க
காலமெல்லாம்
காத்து நிற்கிறேன்       (பெண்)



Sunday, October 16, 2016

சிநேக சன்மானங்கள்

நட்பில் சன்மானமாக கிடைத்த
முதல் காதலி
காதலில் சன்மானமாக கிடைத்த
முதல் முத்தம்
காமத்தில் சன்மானமாக தழுவிய
முதல் உடல்
உறவால் சன்மானமாக கிடைத்த
முதல் பிரிவு
பகையால் சன்மானமாக கிடைத்த
முதல் சண்டை
வெறுப்பால் சன்மானமாக கிடைத்த
முதல் துறவு
தனிமையால் சன்மானமாக கிடைத்த
முதல் நட்பு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அம்மாவால் சன்மானமாக கிடைத்த
முதல் பிறப்பு
பிறப்பால் சன்மானமாக கிடைத்த
முதல் வாழ்வு
வாழ்வில் சன்மானமாக கிடைத்த
முதல் நட்பு
நட்பால் சன்மானமாக கிடைத்த
முதல் காதல்
காதலால் சன்மானமாக கிடைத்த
முதல் காமம்
காமத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் உறவு
உறவால் சன்மானமாக கிடைத்த
முதல் பிரிவு
பிரிவால் சன்மானமாக கிடைத்த
முதல் பகை
பகையால் சன்மானமாக கிடைத்த
முதல் சண்டை
சண்டையால்  சன்மானமாக கிடைத்த
முதல்  துறவு
துறவால் சன்மானமாக கிடைத்த
முதல் தனிமை
தனிமையால் சன்மானமாக கிடைத்த
முதல் அமைதி
அமைதியால் சன்மானமாக கிடைத்த
முதல் ஞானம்
ஞானத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் வேதம்
வேதத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் அருள்
அருளால் சன்மானமாக கிடைத்த
முதல் ஆராதனை
ஆராதனையால் சன்மானமாக கிடைத்த
முதல் சாதனை
சாதனையால் சன்மானமாக கிடைத்த
முதல் சரித்திரம்
சரித்திரத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் சாம்ராஜ்ஜியம்
சாம்ராஜ்ஜியத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் செங்கோல்
செங்கோலால் சன்மானமாக கிடைத்த
முதல் போர்
போரால் சன்மானமாக கிடைத்த
முதல் காயம்
காயத்தால் சன்மானமாக கிடைத்த
முதல் முதல் மரணம்


விட்டுவிடா விட்டு

இடைப்பட்ட காலத்தில்
ஒரு விட்டு ஒன்று சொல்ல முயல்கிறேன்
சட்டென்று எதுவும் நினைவுக்கு வரவில்லை
ஆகையால் அந்த எண்ணத்தை விட்டுவிட்டு
வேறு ஏதாவது சொல்ல யோசிக்கிறேன்
சட்டுபுட்டு என ஒரு விட்டுக்கூட
தட்டுப்படாவில்லையே
என்று விட்டுவிட்ட எண்ணம்
மீண்டும் என்னை விட்டுவிடாமல் விரட்டுகிறது
விட்டை விட்ட இடத்திலிருந்து
மீண்டும் விட்டுவிடாமல் பிடிக்கிறேன்
விட்டு நினைவில் மீண்டும் வருமென்றும்
விட்டுவிடா விட்டை
எப்பாற்பட்டாவது சொல்லியே ஆகவேண்டும் என்றும்
விட்டை அவிழ்க்கிறேன்
-----------------------------------------------

(விட்டு - காமெடி,ஜோக்)


Thursday, October 13, 2016

வேஷக்காரன் கிளியே

நான் வேஷக்காரன் கிளியே
இல்லை மோசக்காரன் கிளியே
கூட்டைத் தாண்டி வெளியே
நீ வந்தால் என்ன கிளியே

பூவோடு நார் சேருமே
என் தோளோடு நீ சாய்யம்மா (2)

Saturday, October 8, 2016

வாசல் இல்லா அறை

வாசல் இல்லாத அறை அது
யாரும் உள்ளே நுழையவும் முடியாது
உள்ளே இருப்பவரால் வெளியே வரவும் முடியாது


உள்ளே இருப்பவரை மீட்டெடுக்க
வெளியே இருப்பவர்கள்
உள்ளே நுழைய அறையின் வாசலை தேடுகிறார்கள்


வாசல் நுழைவில்லா அறைக்குள்
உள்ளே எப்படி ஒருவர் ஏற்கனவே சென்றிருக்க முடியும்
என்பதை சிந்தியாமல் தேடுகிறார்கள்
உள்ளே எவருமில்லை என்பதை எப்போது
இவர்கள் அறிவார்கள்



Sunday, October 2, 2016

காதலும் கத்திரிக்காய்யும்

அவளுக்கு என்மேல்  உண்டான  காதல் மட்டும்
உண்மை
ஆனால் அவள்  என்மேல் கொண்ட காதல் மட்டும்
பொய்

காதல் கொண்டவன் மேல்
உண்டான  காதலை
காமம் கொள்ளும் முன்
உண்மையும் பொய்யும்
பிரிந்து
பரிதவிப்பில் திண்டாட
தனிமையில் கொண்டாட
கத்திரிக்காய் அவளுக்கு
காதலானது