Wednesday, June 28, 2017

அன்புக்கு துறவறம் வேண்டாம்

சில நேரம் ஹாய்யுடன் முடிந்துவிடும்
சில நேரம் கைகுளுக்குதலோடு முடிந்துவிடும்
சில நேரம் கட்டிப்பிடித்தலோடு முடிந்துவிடும்
எல்லாம் சாதாரண அன்பின் பரிமாற்றம் தான்.
அதன் எல்லைகளை அன்பின் அளவுகோளால் நம் மனமே வகுக்கும் .
பிறரின் அன்பும் அதை புரிந்து உணரும்..
ஆனால் இங்கு சிலரின் பார்வை அதை வெறுக்கும்..
அவர்களின் வெறுப்புக்கு இணங்க நம் அன்பை ஏன் துறவறம் அனுப்ப வேண்டும்..

Thursday, June 22, 2017

விடிவெள்ளி

போர்களத்தை கடந்து வந்தேன்
பூக்களத்தை கடந்து வந்தவளை பார்க்க
என் மீதோ ரத்த வாடை
அவள் மீதோ பூக்களின் வாசம்

வாடையும் வாசமும் நெருங்கியபோது
காதல் மழை
இருவரும் காம தீயில் நனைந்து
கர்ப்பூர தீபம் ஆனோம்

அவள் வாசத்தை நான் சுமந்தேன்
அவள் என்னையே சுமந்தாள்
பிறந்தது விடிவெள்ளி

அவள் திகட்டுகிறாள்

 அவளை தவிற 
அந்த கவிஞருக்கு 
வேறு எவளையும் தெரியாது போல !
அவள் முந்தானையை
தொடர்ந்து
கவிதைகளால்
உருவிக்கொண்டே இருக்கிறார்

எங்களுக்கு திகட்டுகிறது
அவள் கவிதைகள்