Thursday, November 3, 2016

வாய்பூட்டு

வாயை மூடி இருந்தால்
கிடைக்க வேண்டிய பல வாய்ப்புகள் பறிபோகும்
வாயை திறந்து சத்தமாய் கேட்டால்
இருக்க வேண்டிய சில மிச்சங்களும் பறிபோகும்
அப்படியேன்றால் என்ன செய்வது ?
நேரம் காலம் சூழல் புரிந்து
கேட்க வேண்டிய நேரத்தில் கேட்பதும்
மவுனிக்க வேண்டிய நேரத்தில் மவுனிப்பதும்
வாய்மை தவறாமல் இருப்பதும்
வாய்ஜாலத்துக்கு மதிமயங்காமல் இருப்பதும்
வாய்மொழியால் பிறர் சூழ்ச்சிகளுக்கு ஆட்படாமல் இருப்பதும்
வாய்மொழியால் பிறர் முகம் கோணாமல் நடப்பதற்க்கும்
வாய்க்கு ஒரு பூட்டு போடுவது சாலசிறந்தது