Thursday, June 22, 2017

விடிவெள்ளி

போர்களத்தை கடந்து வந்தேன்
பூக்களத்தை கடந்து வந்தவளை பார்க்க
என் மீதோ ரத்த வாடை
அவள் மீதோ பூக்களின் வாசம்

வாடையும் வாசமும் நெருங்கியபோது
காதல் மழை
இருவரும் காம தீயில் நனைந்து
கர்ப்பூர தீபம் ஆனோம்

அவள் வாசத்தை நான் சுமந்தேன்
அவள் என்னையே சுமந்தாள்
பிறந்தது விடிவெள்ளி