சிந்தித்து சிந்தித்து
சிதறிய பேனா மை
அழகாக ஆராதனை செய்ய பிறந்த காகிதங்கள்
என் சொல்லை வடிவமாய் திரித்து எழுதினேன்
என் இதயத்தின் நிழலை அதில் பதித்தேன்
இரத்தத்தால் கையோப்பமிட்டேன்
அஞ்சலில் அனுப்ப அஞ்சினேன்
அஞ்சாமல் சந்திக்க வந்தேன்
கண்முன் உன்னை கண்டேன்
காணாதவன் போல் நின்றேன்
அன்போடு அரவனைத்தாய்
சகோதரத்துவத்தை கற்பித்தாய்
வருத்தப்பட்டேன் அவமானப்பட்டேன்
கிறுக்கல்கள் தெரிவதற்கு முன்
தெரியாமல் கிழித்தெரிந்தேன்
கொடுக்க வந்த காதல் கடிதத்தை