Thursday, October 8, 2015

சோளக்காட்டு பொம்மை

கண்விழித்து பாராமல்

தலை சாய்த்து ஓயாமல்

கை கால் சற்றும் அசராமல்

கூலி மிகுதி கேட்டகாமல்
கூனி குறுகி கும்பிடு போடாமல்

வெயிலால் சுட்டு
மழையால் நனைந்து
காற்றால் துடைத்து

யாருக்காகவோ எதுக்காகவோ
காத்து நிற்கிறேன்
யாருமில்லாத  இடத்தை
யாருக்காகவோ காவல்காக்கிறேன்

சோளக்காட்டு பொம்மையாக