Saturday, November 26, 2005

கண்ணீர் காவியம்



என் காதல்  வலியினால்
உண்டான கண்ணீர் துளிகள்
எத்தனை என்பதனை  சொல்ல
என் தலையனை
பல காவியங்கள்  எழுதும் !

காய்ந்த மலர்கள்


காய்ந்த மலர்கள் 


காதலியிடம் கொடுத்தேன் காய்ந்த மலர்களை
திகைத்தாள் !
ஏன் ? என்றாள்
காத்திருந்த நாட்கள் என்றேன் 

Wednesday, October 26, 2005

முட்டு வெட்டு

சரிந்து கிழே விழ இருந்த என்னை
முட்டு கொடுத்து தங்குவாய் என்று எண்ணினேன்

ஆனால்
என் இருதயத்தில்
ஒரு வெட்டு கொடுத்து
முற்றிலும் முறிய செய்தாய்

ஓரமாய் வளர்க்கிறேன் காதலை

ஒளியை கண்கள் பார்க்க
ஒலியை காதால் கேட்க
ஒளிந்து கொண்டது மனம்
ஒலிக்க மறந்தது உதடு
ஒளியுமின்றி ஒலியுமின்றி
ஓரமாய் வளர்க்கிறேன் காதலை


என்னையே ஏமாற்றிகொள்கிறேன்

உன் இதயத்தில் என் மீது காதல்
ஆனால்
உன் நாவால் பொய்யை ஊமிழ்கிறாய்
இருந்தபோதும்
உன் கண்களில் மெய்யை சுமக்கிறாய்
என்னை ஏமாற்றுகிறதாய் நீ எண்ணுகிறாய்
இல்லை இல்லை 
நான் உனக்காக ஏமாறுகிறேன்
என்னையே ஏமாற்றிகொள்கிறேன் 


Sunday, May 15, 2005

காதலுக்கு கண்கள் தேவையில்லை

காதல் என்பது
கண்களில் தோன்றி
உடலில் முடிவதல்ல
உள்ளத்தில் தோன்றி
உள் உணர்வுகளில் முடிவது
அகவே தான் காதலுக்கு
கண்கள் இல்லை
கண்களும் தேவையில்லை

Thursday, May 5, 2005

தீ மணக்கிறது

சந்தனக் காட்டில் தீ
சாம்பல் மணக்கிறது

Tuesday, May 3, 2005

பரித்த பிறகு பூத்த மலர்கள்



பொதுவாக மலர்கள் பரித்த பிறகு பூப்பதில்லை
பரித்த பிறகு காய்ந்த மலர்கள் தான் அதிகம்
ஆனால் இந்த மலரோ பிரித்த பிறகு தான் பூக்கும்

அடடா பூக்களில்தான் எத்தனை வகை
ஒவ்வொரு பூக்களுக்கும்
வெவ்வேறு மனமுண்டு

பரித்த பிறகு  பூக்காத அந்த மலர்கள்
பரித்த பிறகும் மணக்கிறது

பரித்த பிறகும் மனக்காத இந்த பூக்கள்
பரித்த பிறகே பூக்கிறது

ஆண் பெண் உயிரணுக்கள் ஒன்று  கூடி
பத்து மாத இடைவேலையில்
ஒரு பூ கருமுட்டையில் மொட்டாகிறது

காம்பு நுனியில் பூ பூப்பது போல
தொப்புள் கோடி நுனியில் ஒரு பூ பூப்பதற்கு ஆயுத்தமாகிறது
 
காம்போடு கில்லி பூ பறித்தாலும்
மனம் விசி காய்ந்து விழும்

தொப்புள் கொடியோடு கிள்ளி பறித்தாலும்
தொப்புள் கொடி மட்டும் தான் காய்ந்து விழும்

பிள்ளை என்னும் பூ
பரித்த பிறகும் பூத்துவிடும்

இன்னும் பல மனித பூக்கள்
பூப்பதற்கு வித்தாகிவிடும் (விதையாகி) விடும்







Monday, March 28, 2005

சத்தத்தில் துங்குகிறேன்

அன்று தாயின் தாலாட்டில் தூங்கினேன்
இன்று சிலிங் பேன் சத்தத்தில் துங்குகிறேன்

Thursday, March 24, 2005

பஞ்சுமிட்டாய்



ஒரு ரூபாய்க்கு கொஞ்சம் பஞ்சு மிட்டாய் வாங்கினேன்
அதை நாலு பேர் பங்கு கேட்டு 'பஞ்ச' மிட்டாயாக்கிட்டிங்களே  !

Thursday, March 10, 2005

கொடுக்காத காதல் கடிதம்



சிந்தித்து சிந்தித்து
சிதறிய பேனா மை

அழகாக ஆராதனை செய்ய பிறந்த காகிதங்கள்
என் சொல்லை வடிவமாய் திரித்து எழுதினேன்

என் இதயத்தின் நிழலை அதில் பதித்தேன்
இரத்தத்தால் கையோப்பமிட்டேன்

அஞ்சலில் அனுப்ப அஞ்சினேன்
அஞ்சாமல் சந்திக்க வந்தேன்
கண்முன் உன்னை கண்டேன்
காணாதவன் போல் நின்றேன்

அன்போடு அரவனைத்தாய்
சகோதரத்துவத்தை கற்பித்தாய்

வருத்தப்பட்டேன் அவமானப்பட்டேன்

கிறுக்கல்கள் தெரிவதற்கு முன்
தெரியாமல் கிழித்தெரிந்தேன்

கொடுக்க வந்த காதல் கடிதத்தை

Thursday, February 24, 2005

டேய் விடுதலை

டேய் புருசா
உன் கொடுமையிலிருந்து தானே விடுதலை கேட்டேன்
ஏன் நீ விடுதலை பத்திரம் கொடுத்தாய்


ஈரம் காயவில்லை

என் உதட்டில் நீ இட்ட முத்தத்தின் ஈரம் இன்னும்  காயவில்லை
நம் காதலை மறந்துவிட்டு
வேறொருவனை மணமுடிக்க போகிறாய்
போடி காதலியே ஈரம் கண்டது என் கண்கள்


கதையல்ல காதல்

உன்னிடம் சொன்னது என் காதலை
கட்டு கதையல்ல கேட்டுவிட்டு
பதில் சொல்லாமல் செல்வதற்கு

-------------------------------------------
பதில் சொல்லாமல் செல்கிறாய்
உன்னிடம் சொன்னது
கட்டுக்கதையல்ல
என் காதல்
------------------------------------------------------


மரித்(தாய்)

என் பிறப்பில் எனக்கு உயிர் கொடுத்த தாயே
உன் உயிரை காக்க என்னிடம் பணமில்லை
மன்னிக்கவும்
நி மட்டும் ஏன் என்னைவிட்டு மரித்தாய் ?


Friday, January 28, 2005

ஏய் அலையே

உயிர் பறிக்கும் ஆழிபெரலையே , உன் கடல் எல்லையை விட்டு
ஏன் பூமிக்கு வந்தாய்

பாதாளத்தையும் மலையையும் தீவுகளையும் இடம் மாற்றி
புகோணம் மாற்றத்தை உண்டாகினாய்

உன்னுள் உள்ள உயரிணங்களை கொள்ளையடித்தோம்
மனம் இருந்திருந்தால் மன்னிதித்ருப்பாய்.
 
பதிலுக்கு ஏன் ? கோபத்துடன் கோரதாண்டவம் ஆடினாய்

என் பிரியமான உயிர்களை உன்னுள் விழுங்கிவிட்டாயோ
அல்லது பிழைத்துபோகட்டும் என்று கரை எற்றினாயோ

பிஞ்சு நெஞ்சங்களை அலையால் கிழித்துவிட்டாய்
வாழ வழியில்லாமல் அலையவிட்டாய் , ஏய் அலையே 

மீனவர்களின் வாழ்வை ஒளி  ஏற்றி தொடங்கி வைத்த கடலே !
நீங்கள் வாழவே வேண்டாம் என்று இன்று முடிஉரை எழுதி விட்டாயோ ?