Monday, July 27, 2015

இராணுவ வீரன்

உறைந்து கிடக்கும் பனிகளை
விரைந்து விரைந்து கடக்கிறோம்

வானம் முட்டும் மலைகளை
 கால்களால் அளக்கிறோம்

நேரம் கூட பார்பதற்கு நேரமில்லையே
கண் விழித்து  தேசத்தை காவல் காக்கிறோம்

உடல்களால் வேலி செய்து
உயிர்களால் வேள்வி செய்கிறோம்

கண்ணிமைக்கும் நேரத்தில் காலமாகிறோம்
(நினைவு தூண்களில் கல்வெட்டாகிறோம் )
வங்கி கணக்குகளில் காசோலையாகிறோம்