முற்கால விதிகள் பேசி
கனகாம்பரம் சூடாமல் போன கைம் தலைகள் கோடி.
கருவறை எட்டாமல் எட்டி நின்று பார்த்து காணிக்கை மட்டும் செலுத்தி தூபம் கண்ணில் ஒத்தி ஒய்யாரமாய் ஒதுங்கியவர்கள் கோடி
செய்யும் தொழில் தெய்வம் என்பார்
செய்த தொழிலை தனக்கான சாதியாக்கி அதனை இனம் போல கருதி இனங்காமல் முரண்பட்ட முட்டாள்கள் கோடி
முட்டி மேல் கால்சட்டை போட்ட பின் மடிசார்கால கதைகள் பேசும் பெண்கள் கோடி
இவர்கள் பிற்போக்கு தனத்தின் உச்சம்.
பிறப்பால் பாகுபாட்டை வகுத்து கொண்டவர்கள்
பண்பால் பகை கலைய பாடம் எடுக்கிறேன்..
பண்பட்டுவிடுங்கள்