Wednesday, August 3, 2016

காதல் கோள்கள்

செழிப்பான பூமிக்கோ நிலவின் மீது காதல்
வறண்ட  நிலவுக்கும் பூமியின் மீது காதல்

இடையே ஆகாய இடைவெளி தடை போட்டாலும்
இரவில் நிலவு காதலை ஒளியால் ஒளிர்விடுகிறது

அதை தினம்தோறும் ரசிக்கும் பூமி
கவிதைகளாய் சொல்லி நிலவை புகழ்கிறது..

தொலைவிலிருந்து இதை கவனிக்கும் சூரியனுக்கோ
வயட்றேரிச்சல்
பகலில் வெப்பத்தால் இருவரையும் சுட்டெரிக்கிறது

பகலிலே பயந்து மறைந்து தொலைந்த நிலவு
மீண்டும் இரவில் தோன்றி உனக்காக நான் இருக்கிறேன் என்பதை பக்குவமாய்
பூமிக்கு மென் ஒளியால் வெளிபடுத்துகிறது