Wednesday, July 16, 2014

நில்லென்று சொல்லும்போதே

நில்லென்று சொல்லும்போதே
மழை சாரல் மோதுதே
விலகியபோதிலும் விரல் தொடும் ஞாபகம்

ஒருமுறை தரிசனம்
மறுமுறை கரிசனம்

நெஞ்சோடு சேர்த்த ஆசை வீணாக போகுதே.

கண்ணே உன் பார்வை போதும்
கன்மலையை தாங்குவேன் .

காலடி தேடினேன்
 காலத்தை இழக்கிறேன்

பூவே உன் நேசம் போதும்
நான் இங்கு வாழவே

நாட்களே நலிந்திடு
நாழிகையில் உறைந்திடு

நெஞ்சோடு சேர்த்த ஆசை வீணாக போகுதே.
ஒருமுறை தரிசனம்
மறுமுறை கரிசனம்

நில்லென்று சொல்லும்போதே
மழை சாரல் மோதுதே
விலகியபோதிலும் விரல் தொடும் ஞாபகம்

கண்ணே உன் கருணை போதும்
கல்லறையை தேடினேன்.