Sunday, September 27, 2015

புலி வேஷம்

யாரும் கண்டுகொள்ளாத காலம்
ஒன்று வந்தால்
மனம் சோர்வுற்று போகும்
உடல் தளர்ந்து போகும்
ஏக்கம் ஆளை கொல்லும்

உள்ளம் வலி மீள வழி தேடும்
விழி பிதுங்கி ஆற்றல் பதுங்கி கொள்ளும்

வேண்டாம் இன் நிலை
மாறட்டும் இன் நிலை


அனுபவத்தை தொகுத்துகொள்
மனதுக்கு ஒப்பனை இட்டுகொள்

பதுங்கிய நிலையில் மெல்ல நகரு
இலக்கில் கண் வைத்துகொள்
காலம் கைகூடும் நேரம்
இரையை பாய்ந்து கவ்விக்கொள்

கொள் புலி வேஷம்