Sunday, December 20, 2015

கொல்லும் வினாக்கள்

என்னை தேடி வரும் வினாக்கள்
என்னை கொல்லாமல் கொல்லுதே

என்னை நம்பி இருக்கும் குடும்பத்தை
எப்படி கரை சேர்ப்பேன் என்று என் மனம் கேட்கிறது

நாளை காலை உணவுக்கு எங்கே போவது
என்று இந்த இரவு என்னை கேட்கிறது

எப்படி கடனை திருப்பி கொடுப்பேன்
இன்று குட்டி போட்ட வட்டி கேட்கிறது

காசில்லாமல் காதலிகளை கைவிட்டேன்
நீ ஆம்பளைய என்று காமம் கேட்கிறது

யார் எவ்வளவு கேவலமாக  கேட்டாலும்
எனக்கு  என்ன என்று செல்கிறேன்
நீ பைத்திமா என்று ஊர் கேட்கிறது