Friday, August 12, 2016

தனியே பேச வந்தேன்

தனியே பேச வந்தேன்
நீ கேளாததால்
பொதுவில் ஓர் பாடலாய் பாடுகிறேன்

அதை சொல்லத்தான், நெஞ்சினில் நூறு ஆசைகள்
அதை சொல்லாத போது உள்ளே நெஞ்சம் நொறுங்கி விழும் ஓசைகள்

தனியே பேச வந்தேன்
நீ கேளாததால்
பொதுவில் ஓர் பாடலாய் பாடுகிறேன்

ஓர் நதியே என் தாகம் தீர்த்திடாத போது
ஓர் குவளை நீர் அதை செய்திடுமோ

நீங்காத எண்ணங்கள் நெடு நாட்கள் உண்டு
மகரந்தம் மனம் வீசிட அதை நெருங்காதோ
மலர் மொக்கும் வண்டு

தீராத ஆசைகள் எனக்கென்றும் உண்டு
நீ வந்து தட்டினால் திறக்காதோ எந்தன் கதவு

நெடுதூரம் பயணித்து வந்தேனம்மா
உனக்காக காத்து நிற்கும் ஓர் பாடல் நான்.