Sunday, August 14, 2016

சொற்களை விற்ப்பவன்

என் இதயம் என்ன இருட்டறையா ?
அணையா விளக்கை ஏற்றுகின்றேன்

என் செவிகள் கேளாத ஒலிஅழி கூடமா ?
இசைகள் இசைத்து பாடல்கள் படிக்கின்றேன்

என் கண்கள் ஒழுக்கமற்ற குருட்டுப்பார்வையா ?
பிறர் வாழ்வில் ஒளிவிசும் ஒளி மரங்களை நடுகிறேன்

நான் அநியாயங்களை தட்டி கேட்காத மவுனியா ?
வசை வீசும் சொற்களை வாய்ஜாலத்தால் திசை மாற்றி விடுகிறேன்

கேலி சிரிப்புகளை உள்வாங்கி கொள்கிறாள்
அழுகிறேன் நெகிழ்கிறேன் புகழ்கிறேன் மகிழ்கிறேன்

வாழ்வில்
உள்ள வலிகளை 
உள்ளே சுமந்து 
வெளியே
அவரவர் தேவைகேற்ப்ப
விலையில்லா
சொற்களை
இலவசமாய்
விற்கிறேன்           (விநியோகிக்கிறேன்)

கவிதையாக