Monday, December 12, 2016

நானும் கடவுளாகிறேன்

நான் நன்றாக வாழ்ந்த போது
என்னை சுற்றி நின்று வாழ்த்தியவர்கள்
நான் சற்றே தாழ்ந்த போது
என்னை தூற்றி கொன்று வீழ்த்தினார்கள்

என்னை கட்டிலுக்கு
கரம் பிடித்து இழுத்தவர்கள் கூட
என்னை யார் என்றே தெரியாது என்றார்கள்

ஒரு சமையம்
நான் தாழ்ந்து இருந்தேன்
அதற்க்கு முன்பு
நான் வாழ்ந்து இருந்தேன்

மீண்டும் யாரோ விட்டு சென்ற
கருணையால்
கிருபையால்
வாழ்கிறேன்

அனுபவங்களை சுமந்து
ஞான நிலையை கடந்து
கால ஓட்டத்தில்
நானும் கடவுளாகிறேன்