Friday, March 24, 2017

கண்மணி கவிதைகள்

இரவல் வாங்கிய கவிதை புஸ்தகம் ஒன்றை வாசித்துகொண்டிருந்தாள் கண்மணி
அதில் ஒரு கவிதை
கண்மணி என்கிற தலைப்பில்

இரவல் வாங்கிய புஸ்தகத்தில் கண்மணி கவிதைகளை
இரவெல்லாம் வசித்தாள்
இரவோடு இரவல் காலம் முடிந்துவிடும் முன்னே
கண்மணி கவிதை புஸ்தகத்தில் உள்ள
கவிதைகளை வாசித்து முடித்தாள்.

வாசித்தாள்
கண்மணி
கவிதையை
நேசித்தாள்
கண்மணி
கவிதைகளை

தற்போது கனவில் கண்மணி கவிதைகளின் இரவல் காலத்தில்.