Monday, January 7, 2013

கடலம்மா




கடலம்மா கடலம்மா 
கரையோரம் நுரையம்மா 
வங்ககரையொரம் விடியலம்மா 
வலையெல்லாம் இறையம்மா 
வழிகாட்டும் கலங்கரை விளக்கம்மா 
எங்கம்மா கடலம்மா 



உப்பு பவளம் முத்து 
கடல் சுமக்கும்  சொத்து 
பிரித்தெடுப்பதோ மனிதனின் சித்து           [எலே அம்மா கடலம்மா ]

இவ் வளத்தின் ஆசையில் பிடிக்கும் பித்து 
அசந்துவிட்டால் வீடு திரும்புவாய் செத்து 


வீதியுமில்லை எல்லையுமில்லை 
அச்சாணி காற்று 
அசைவதே அலைகளின்  கூற்று                 [எலே அம்மா கடலம்மா ]

துடுப்பின் நெருடல் 
அலைகளின் வருடல் 
படகு முன்  நழுவுதல் 
பின் நீர் விலகுதல்                                          

கடலம்மா கடலம்மா 
கரை வருவாய் துணையம்மா                     [எலே அம்மா கடலம்மா ]

பயணம் எது வரை 
பேரலை பெரும்காற்று விழுங்கும் வரை 


................................to be continued