Tuesday, March 10, 2015

நம்நங்கை திருநங்கை

ஆண்மையில் பெண்மையும்
பெண்மையில் ஆண்மையும்
வெறுமையில் ஒருமையில்
உரிமை கொண்டாடுகிறேன்

வீதி உலா செல்கிறேன்
வசை சொல்லை அள்ளுகிறேன்
இசைதாளம் போடுகிறேன்
இச்சைக்கு இசங்காமல் வாழ்கிறேன்.

இலக்கண பிழை இல்லை
தன்நம்பிக்கையில்
தவறேதும் இல்லை
என் செய்கையில்

சொந்தமில்லை
பந்தமில்லை
ஒளியுமில்லை
இருளுமில்லை

தவிக்கிறேன்
துடிக்கிறேன்
வெறுக்கிறேன்
நகைக்கிறேன் 
ரசிக்கிறேன்

( துணை இல்லாத எனக்கு
காதல் எதற்கு
வானம் தொட்ட எனக்கு
வைகறை எதற்கு )