Friday, June 26, 2015

மனநோய்

காதில் கேட்கும் குரல்கள் உன்னை வழி நடத்தும்
நீ பேசும் சொற்கள் எல்லாம் அபத்தமாகும்
உன் கண்கள் காண்பவைகள் எல்லாம் பொய்யாகும்
காரணம் இன்றி பயம் வரும்
கண்டதுக்கெல்லாம் கோபம் வரும்

மனம் அழுத்தத்தால் மாசடைந்து வாடும்
உள்ளம் உள்ளிருந்து கொல்லும்
உன் நிலையை அறிய உன்னால் முடியாது
உன்னை யாரும் எளிதில்  பரிசோதிக்கவே முடியாது

உடல் நோய் மருந்தில் குணம் காணும்
மனநோய் ?
மருந்து + அன்பில் குணம் பெரும்.