Sunday, June 7, 2015

வேண்டா கவிதைகள்

என் கவிதைகளில்
அழகிய வெண் நிலவு வேண்டாம்
பொழிய துடிக்கும் விண்மீன்கள் வேண்டாம்
முதுகில் முளைக்கும் சிறகுகள் வேண்டாம்
பொய்களில் மிதந்து வரும் தேவதைகள் வேண்டாம்
காமம் தின்னும் காதல் கதைகள் வேண்டாம்
நான் நல்லவன் என்று செப்புகின்ற சொற்கள் வேண்டாம்
என் எண்ணங்களை எதிர்ரொளிக்காத நிகழ்கால நிகழ்வுகள் வேண்டாம்

(யாரோ ஒருவனாக  எதோ ஒன்றாக கனவுகளில் இருந்துவிட வேண்டும் )

நான் கனவுகள்