Monday, June 22, 2015

சேர்ந்து வாழ்கிறோம்

என்னை விட்டு சென்றவள்
என்னிடமிருந்து எட்டி நின்றவள்

மீண்டும் வந்தாள்
மீண்டு வந்தாள்

அழுக்காய் வந்தாள் அள்ளிகொண்டேன் அமுதாய்
கறையுடன் நின்று
என்னை கரைத்து விட்டாள்
கண்ணீரால்





(Extension)

மீண்டும்
என்னை காதலிக்கிறாயா என்றாள்
என்னை கல்யாணம் செய்கிறாயா என்றாள்

சிறுக்கி அவள்
சங்கமத்துக்காக சங்கலாயித்து நிற்கிறாள்

வாறி அனைத்து கொண்டேன் ....

(Extension-2)

மீண்டும் என்னை விட்டு சென்று விடுவாளோ
சென்றாலும் கவலை இல்லை என்றது என் மனம்

அவளை விட்டுவிட கூடாது என்றது உடல்

புறிதல் கொண்டபின் திருமணம் எதற்கு

மனங்கள் ஒன்று பட்டபின் காதல் எதற்கு
உடல்கள் ஒன்று பட்டபின் காமம் எதற்கு

சேர்ந்து வாழ்கிறோம்
நம்பிக்கையில்