Monday, October 26, 2015

கண்ட நாய் கவிதை

எனது கவிதையை
ஒரு ஆசிரியரின் பார்வைக்கு கொண்டு சென்றேன்
எதையும் கண்டுகாதவன் போல் கவிதையை படித்தான்
படித்து முடித்துவிட்டு
கண்ட நாய் எல்லாம் கவிதை எழுதுது என்றான்
பாராட்டுக்காக காத்திருந்த
எனக்கு தூக்கிவாரி போட்டது
இதயம் துடிதுடித்து போனது

நான் கண்ட நாயானேன்
கண்டவன் பார்வைக்கு