Thursday, November 5, 2015

காதல் காலம்

விடியும் முன்பு விழித்து கொள்கிறேன்
நாட்காட்டியையும் நாழிகையையும்
சோதித்து கொள்கிறேன்
உன் புகைப்படத்துடன் கண் பதித்து கொள்கிறேன்

சந்தித்ததை எண்ணி சிந்திக்கிறேன்
சிந்தித்ததை கொண்டு உன்னை சந்திக்கிறேன்

ஒரு சில நொடிகள்
முகம் பாராமல் விழி நோக்காமல்
எனக்குள் வெட்கி நாணுகிறேன்

நாம் சேர்ந்து செல்கையில்
என் விரல்களால் உன் விரலை வருடி கொள்ள முயல்கிறேன்
முடியாத பட்ச்சத்தில் கண்களால் காதல் பொழிகிறேன்

இரவெல்லாம் கண்விழித்து
என்னிலையை குறுந்தகவலாய் அனுப்புகிறேன்

அதை முத்தமிட்டு பெருந்தகவலாய்
நீ திருப்பி என்னிடமே அனுப்புகிறாய்

காலம் மறந்து காதல் செய்கிறோம்
காலங்கள் கடந்தும் காதல் வளர்க்கிறோம்