Tuesday, October 18, 2016

காதல் பிரிவு

தீராது காதல் தாகம்
தீயில் வேகுது
திமிர் கொண்ட தேகம்

என்னை இழந்து
உன்னை சுமந்து செல்கிறேன்  (நிற்கிறேன்)
(அல்லது)
(என்னை உன்னிடமிழந்து, உன்னை என்னுள் சுமந்து செல்கிறேன் )

நரக வேதனையில்
நகரும் நேரங்கள் மனதை நொறுக்குகிறது     (நோருக்குதே)



முன்பு நெஞ்சில் (இதயத்தில்) இதழால் பச்சை குத்திய நினைவுகள்
பின்பு பிச்சை கேட்டு அதை கத்தியால் கீறி அழிக்குதே (குதறி தள்ளுதே)
என்ன செய்வேன் என்னை என்ன செய்வேன்
காதல் (காதலே) என்னை கொல்லுதே என்ன செய்வேன்   (ஆண்)



உன்னை ஏன் பார்த்தேன் ,
பார்த்ததும் என்னை ஏன் துலைத்தேன்
ஏனோ ஏனோ தெரியவில்லை
இன்று நான் படும் வேதனைகள்
உனக்கு ஏன் புரியவில்லை   (ஆண்)

காதலில் சிறு பிரிவு என்பதே
மீண்டும் சேர்வதற்காக தானே
காத்திருந்தால் தெரியும்
இந்த அன்பின் வலி புரியும்  (பெண்)



( நிஜத்தில்
ஆரா காதல் காயம் செய்து
கனவில் வந்து
மயில் இறகால்
மருந்தை தடவுவது ஏனோ )  (ஆண்)

பூவை விட்டு விழுந்த இதழ்கள்
மீண்டும் இணைவதில்லை  (ஆண்)

காற்றில் ஒடிந்த கிளைகள்
மீண்டும் துளிர்ப்பதில்லையா   (பெண்)



வேண்டாம் இந்த காதல் வேண்டாம்
வேதனையில் வேள்வி செய்யும் இந்த நிலை வேண்டாம்  (ஆண்)


வாடை காற்றே
உனக்கு புரியவில்லையா

நானும் நொடிவது
உனக்கு தெரியவில்லையா  (பெண்)

காத்திருக்கிறேன்
காலம் கரையும் வரை
காத்திருக்க வைக்கிறேன்

காதல் கண்ணீரில் கரையாமலிருக்க
காலமெல்லாம்
காத்து நிற்கிறேன்       (பெண்)