Wednesday, October 26, 2016

அகங்கார சோதனை

முதலில் கெஞ்சி பார்த்தாள்
பிறகு கொஞ்சி பார்த்தாள்
அதன் பிறகு பழகி பார்த்தாள்
பிறகு அதிகாரம்  செய்து பார்த்தாள்
அதன் பிறகு ஆணவம் கொண்டு பார்த்தாள்

இது வழக்கமாக பெண்கள்
கையாளும் யுக்தி என்பதால்
நான் எதற்கும் அசரவில்லை
ஒரே  நிலையில் தான்  இருந்தேன்
சொல்லபோனால்
இன்னும் அதிகமாக
அவளிடமிருந்து எதிர்பார்த்தேன்
ஆனால் அவளால்
இந்த சிறு சோதனைகளையே
தாக்குபிடிக்க முடியவில்லை

பிறகு என்னை வெறுத்து பார்த்தாள்
பதிலுக்கு நானும் வெறுத்துவிட்டேன்

காரணம்
அவளிடம்
சந்தர்ப்ப சூழ்நிலைக்காக வந்த காதலே
இருந்ததே தவிற
உண்மையான காதல் இல்லை
என்று முடிவில் தெரிந்து கொண்டேன்

இருந்த போதும்
நான் அவளை காதலிக்கவில்லை
என்று அர்த்தமில்லை
அவளை
மனதார காதலித்தேன்
ஆகவே சோதித்தேன்

சோதிப்பது தவறு  இல்லை
சோதித்த பின் தான் தெரிந்தது
நான் சோதித்தது
தவறாக போகவில்லை என்று

பல பாடுகள் கடந்து
உடைந்து மெலிந்து

அவள் தற்பொழுது
என்னை காதலிக்கிறாள்
என்னை தாண்டி காதலிக்கிறாள்