Wednesday, October 19, 2016

பண்டிகை

பண்டிகைகள் ஏன் கொண்டாடப்படுகிறது
பண்டிகைகள் ஒரு மகிழ்ச்சியின் வெளிபாடு
அப் பண்டிகையின் நோக்கம் எதுவாகிலும்
அதில் ஒரு ஆனந்தம் நிறைந்திருக்கும்

பசித்த வெறுத்த கண்களுடன்
பார்க்கும் ஏழைகளுக்கு அது
ஏக்கம் நிறைந்ததாய் இருக்கும்

இந்நிலை மாறட்டும்

இருப்போர் இல்லாதோருக்கு பண்டிகைகளில்
அன்பாய் பரிசுப்பொருட்களை தரட்டும்

பண்டிகை என்பது பகிர்தல்
மகிழ்ச்சியை பகிர்தலாக இருக்கட்டும்