Saturday, October 22, 2016

வார இதழ் கவி விற்ப்பவன்

வாரா அன்புகளை எல்லாம் கட்டி இழுத்து
கவலைகளை எல்லாம் கவிதைகளாக வடித்து
வார ஏடுகளின் காகிதங்களில் வார்த்தெடுத்து
விற்ப்பனைக்கு அனுப்பிய பின்
அதை எழுதியவனே
வாரம் தோறும் ஏலம் போல் கூவி கூவி விற்கிறான்
அதில் என்ன இருக்குமோ என
வாஞ்சையில் வாங்கியவர்கள்
அதன் வாசத்தை நுகர்ந்துவிட்டு
( அதில் அடித்த பழைய புடவையின் வாசத்தை கண்டுகொண்ட பின் )
வேண்டா வெறுப்பாய் அதை பரணின்மேல்
தூக்கி எறிகிறார்கள்
நானும் படித்தேன்
தாங்கள் வடித்த கவிதைகளை
என பெருமையாக
போடிப்போட்டுக் கொண்டு
அதை எழுதிவனுக்கு
பாராட்டுகளால்
பதில் எழுதி
பெருமை சேர்கிறார்கள்.
அவனும் அதை
ஒரு உந்துதலாக கருதி
உற்சாகமாய்
தொடர்ந்து அதேபோல்
வாரம் வாரம்
எழுத்துகளால் எழுதி
நம்மை சாகடிக்கிறான்