Monday, August 24, 2015

வலி உழுதிட

நான்
விளைநிலம் உழுதிட 
கடன் பெற்றேன்
விதைகள் வாங்கிட 

விதை விளைந்தது 
வேர்வை துளிகளில்

வானம் பார்த்தேன்
கைகள் விரித்திட

மழை வேண்டி 
படையல் இட்டேன் 
பூமி நனைந்திட 

நாள்தோறும் கண்ணீருக்கு
மடகு கட்டினேன்
கண்கள் குளிர்ந்திட

கண்மணியென கண்காணித்தேன்
பயிர்கள் விளைந்திட

ஆட்கள் கிடைக்கவில்லை 
அறுவடை செய்திட

விலை போகவில்லை
அரசு கொள்முதல் செய்திட

நிலத்தை விற்றேன்
வாங்கிய கடனை அடைத்திட 

எனக்கு தெரியாது 
வேறு தொழில் செய்திட

வழி தேடுகிறேன்
வலி மறந்திட