Saturday, August 8, 2015

கவிதை ஒன்று எழுதுகிறேன்

கவிதை ஒன்று எழுதுகிறேன்
அதன் எழுத்தின் வடிவிலே
நான் உன்னை  வரைய முயல்கிறேன்

என் எண்ணத்தில் எண்ணியதை கறைகிறேன்

கால் வயதின் கண்ணி நீ
காய்ச்சாத பால் வெளி நான்

அகல கலால் உன்னை அளக்கிறேன்
ஆராய்ச்சிகளால் அழ்மனதை துளைக்கிறேன்

நெற்றி பொட்டை தாண்டி
புருவத்தில் வழக்கி உன் கண்களில் சிக்கி கொள்கிறேன்

காம நெடியிதனில் கண்ணீராய் வழிந்து
கண்ணத்தை கடந்து இதழ்களில் உப்பென கரைகிறேன்

தொண்டை குழிதனில் திமில் நழுவி கொள்ளவே
மார்தனில் மோதி மிதமென மிதக்கிறேன்

இடைதனில் கரை சேர்ந்து வனம்தனை கடந்து
சுமைகளை இறக்கி சுனைதனில் மூழ்கி சுடேற்றிகொண்டேன்

தளிர் தனை கிள்ளி  தேன் தனை சுவைத்து
தெம்பேற்றி ,தென்னை குருத்தோலையில் பால் இறக்கி
தண்டில் நார் உரித்து ,முழங்கால் பணிந்து
முகம்தனை பாதம் பதித்து கொண்டேன்

என்ன வடிவம் என வியக்கிறேன்
உயிர் தந்த சிர்ப்பிதனை நினைக்கிறேன்

உன்னை வரையவே
வண்ணங்களில் என்னையும்
கலந்து கொண்டேன்

யாரடி நீ யாரடி
 என் முன்னே வந்து கூரடி

உன் காதல் இன்னாதென்று
உள்நெஞ்சை தொட்டு நீ கூரிடவே
கவிதை முழுமையடைகிறது