அன்பை காட்டி
முதுகில் குத்தி
ஏமாற்றியவர்களுக்கெல்லாம்
அன்பையே பரிசாக தந்துவிடுகிறேன்
வெறுப்பை ஒருபோது உமிழ்வதில்லை
என்கிற கொள்கையை
முடிந்த அளவு கடைபிடிக்கிறேன்
நான் வளர வளர
என்னை ஏமாற்றுபவர்களின்
எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது
அவர்கள் மீது என் அன்பும் பெருகிக்கொண்டே போகிறது.
ஒருவேளை
ஒருகட்டத்தில்
என்னால் அன்பின் பரிசை
அவர்களுக்கு தரமுடியாத
சூழல் வந்துவிடுமோ என்கிற
எண்ணமும் அடிக்கடி வருவதுண்டு .
அதுபோல் சுழல் நேரிடும்போது
அன்பை கடன் வாங்க நேரிடுகிறது
யாரோ என்மேல் உள்ள கருணையில்
அந்த அன்பை கடனாக
அவ்வவப்போது தந்துவிட்டு செல்கின்றனர்
அந்த அன்பையெல்லாம் சிறுகசிறுக சேர்த்துவைத்து
என்னை ஏமாற்றி
என்னிடம் அன்பின் துரோகம் செய்துவிட்டு
செல்போருக்கு
அவ்வவப்போது
அந்த அன்பை பரிசாக தந்துவிடுகிறேன்.
அன்பு தொடர்கிறது
ஏமாந்தவன் ஏமாற்றியவனுக்கே
அன்பை பரிசாக தருகிறான்
ஏமாற்றியவன் ஏமாந்தவனை
கோமாளியாக பார்க்கிறான்
சரியான ஏமாளி
என்றும் எண்ணுகிறான்
ஏமாந்தவனிடம் வாங்கிய
அன்பின் பரிசு
அவனுள் அப்படி ஒரு சிந்தனையை
தூண்டிவிட தொடங்கும்
அதை அவன் உணர்வதில்லை
அன்பின் பரிசுதான்
அவனுள் செலுத்தப்பட்ட
அன்பின் அம்பு என்று
அந்த அம்பு அமுதும் நஞ்சும் கலந்தது
அவன் திருந்தினால் அது அமுதை அவனுள் செலுத்தும்
அவன் மறுதலித்தால் அது நஞ்சை அவனுள் செலுத்தும்
அன்பின் பரிசு
விலை உயர்ந்தது அல்ல
விலை குறைந்ததும் அல்ல
அனால்
விலை மதிப்பில்லாதது
அதை தருபவனும் விலை மதிப்பில்லாதவன் தான்
அவனை காப்பது
அன்பின் கடமை
முதுகில் குத்தி
ஏமாற்றியவர்களுக்கெல்லாம்
அன்பையே பரிசாக தந்துவிடுகிறேன்
வெறுப்பை ஒருபோது உமிழ்வதில்லை
என்கிற கொள்கையை
முடிந்த அளவு கடைபிடிக்கிறேன்
நான் வளர வளர
என்னை ஏமாற்றுபவர்களின்
எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது
அவர்கள் மீது என் அன்பும் பெருகிக்கொண்டே போகிறது.
ஒருவேளை
ஒருகட்டத்தில்
என்னால் அன்பின் பரிசை
அவர்களுக்கு தரமுடியாத
சூழல் வந்துவிடுமோ என்கிற
எண்ணமும் அடிக்கடி வருவதுண்டு .
அதுபோல் சுழல் நேரிடும்போது
அன்பை கடன் வாங்க நேரிடுகிறது
யாரோ என்மேல் உள்ள கருணையில்
அந்த அன்பை கடனாக
அவ்வவப்போது தந்துவிட்டு செல்கின்றனர்
அந்த அன்பையெல்லாம் சிறுகசிறுக சேர்த்துவைத்து
என்னை ஏமாற்றி
என்னிடம் அன்பின் துரோகம் செய்துவிட்டு
செல்போருக்கு
அவ்வவப்போது
அந்த அன்பை பரிசாக தந்துவிடுகிறேன்.
அன்பு தொடர்கிறது
ஏமாந்தவன் ஏமாற்றியவனுக்கே
அன்பை பரிசாக தருகிறான்
ஏமாற்றியவன் ஏமாந்தவனை
கோமாளியாக பார்க்கிறான்
சரியான ஏமாளி
என்றும் எண்ணுகிறான்
ஏமாந்தவனிடம் வாங்கிய
அன்பின் பரிசு
அவனுள் அப்படி ஒரு சிந்தனையை
தூண்டிவிட தொடங்கும்
அதை அவன் உணர்வதில்லை
அன்பின் பரிசுதான்
அவனுள் செலுத்தப்பட்ட
அன்பின் அம்பு என்று
அந்த அம்பு அமுதும் நஞ்சும் கலந்தது
அவன் திருந்தினால் அது அமுதை அவனுள் செலுத்தும்
அவன் மறுதலித்தால் அது நஞ்சை அவனுள் செலுத்தும்
அன்பின் பரிசு
விலை உயர்ந்தது அல்ல
விலை குறைந்ததும் அல்ல
அனால்
விலை மதிப்பில்லாதது
அதை தருபவனும் விலை மதிப்பில்லாதவன் தான்
அவனை காப்பது
அன்பின் கடமை







