Friday, November 18, 2016

அவளை மீண்டும் சந்திப்பேன்

அவளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு என தெரியவில்லை ஆனால்
அவளை பார்க்கும் முன்பே ஒரு உணர்வு வந்து விடும்
அவளை பார்க்கப்போகிறேன் என்று
அது எனக்கு சொல்லாமல் சொல்லிவிடும்

ஏன் இப்படி வருகிறது
அவளை ஏன் இப்படி
மீண்டும் மீண்டும் நினைவுட்டுகிறது
என்று தோன்றும்

பிறகு அப்படியல்லாம்
நடக்காது
இது வெறும் நினைவுதான்
என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்

ஆனால் அதை நான்
மறக்கும் வேளையில்
அந்த நிகழ்வு நடந்துவிடும்

ஆமாம் அவள் நிஜமாகவே வருவாள்
என் கண்கள் முன்னே
அது நிகழும்

அவள் ஓரக்கண்ணால் என்னை பார்த்து
வெட்கத்துடன் புன்னகைத்துவிட்டு
என்னை கடந்து செல்வாள்

ஏன் இப்படி நடந்தது
எப்படி இது நடந்தது
என்று நான் எனக்குள்ளே
அதிசயத்து கிடப்பேன்

அவள் வரவிருப்பாது
எப்படி எனக்கு முன்பே தெரியும்
என்று எனக்கு நானே கேள்வி எழுப்பிகொள்வேன்  

அவள் கடந்தபின்பும்
அவள் நினைவும்
அவள் சிரிப்பும்
அவளாக என்னுள் தங்கிவிடும் .
அவளுக்காக காத்திருக்கவும் செய்துவிடும்
அவளை மீண்டும் சந்திப்பேன் என்கிற சிந்தனையுடன்