Sunday, November 6, 2016

அடுப்படி கனவுகள்

விறகை கூட்டி
நெருப்பை மூட்டி
அடுப்பை பற்ற வைத்த பின்
தணலை குழல் மூலம் ஊதி
தக தகவென எரிய விட்டுகொண்டிருப்பாள்

பானையில் உலை கொதிக்கும் நேரத்தில்
கிண்ணத்தில் புளி கரைத்து கொண்டிருப்பாள்

வீட்டுக்கு வரும்போது கணவன் கண்டிப்பாக
அரிசி வாங்கி வாருவார் என்கிற மிகை நினைப்பில்
மிதந்து கொண்டிருப்பாள்

கடைசியில்
கருகிய விறகுகள்
கரும் புகையால்
அவள் கனவுகளை கலைத்து
அவள் கண்களில் நீர் வடிய செய்து கொண்டிருக்கும்