Monday, November 14, 2016

கரம் சேரா காதல்

காசுக்காக காதலிக்கிறேன்
என்று அவள் நினைத்து விடுவாளோ
என்று விலகி இருந்தேன்

நம் கதை தெரிந்து
காதலிக்க மறுக்கிறானோ
என்று அவள் விலகி இருந்தாள்

எனக்கோ அவள் கதை பொருட்டல்ல
அவளுக்கோ காசு ஒரு பொருட்டல்ல

அப்படி இருந்தும்
தவறான புரிதலால்
அவளுக்கும் எனக்கும்
சிறு சிறு தயக்கம்

இருவரும்
இறுதிவரை
பேசிக்கொள்ளவே இல்லை

ஆகவே
எங்கள் காதல்
கண்களை தாண்டி
கரம் சேரவே இல்லை