Tuesday, November 22, 2016

கடவுள் இருக்கிறார்

உண்டியலுக்கு அறங்காவலர் இருக்கிறர்,
கண் காது வாய் கை கால் உடல்களுக்கு சிற்பி இருக்கிறார்,
உயிருக்கு அர்ச்சகர் இருக்கிறார் ,
இவர்களை பிழைக்க வைக்க நாம் இருக்கிறோம் ... அவ்வளவுதான் .
ஆனால் கடவுள் உருவம் இல்லா மனதில் இருக்கிறார் மனிதத்தில் இருக்கிறார்.
அவரவர் நம்பிக்கையில் இருக்கிறார்.
இப்படி எதோ ஒரு வகையில்
நம்மோடு கடவுள் இருக்கிறார்
கடவுள் இல்லை என்கிற சொல்லிலும் கடவுள் இருக்கிறார்

கடவுள் இல்லை என்றாலே
அது ஒரு முடிவு இல்லை
அதுவே ஒரு தேடலின் தொடக்கம்
கடவுள் இல்லை என்று நிருபிக்க
தொடங்கும் தொடக்கம்
அது இன்னும் தொடக்க நிலையிலே தான் இருக்கிறது.
கடவுள் இல்லா திசையை தேடி கொண்டே தான் இருக்கிறது.

அந்த தேடலில் போலி கடவுள்களை
அது கண்டுபிடிக்கிறது
அதை போலி என்று அடையாள படுத்தி அழிக்கிறது

இப்படி நிஜ கடவுளை இல்லை என்று நிரூபிக்க
அது மேற்கொள்ளும் பயணம்
எதோ ஒரு உண்மையை
வெளிக்கொணரும் என்றே தோன்றுகிறது

கடவுள் இருக்கிறார் என்று
கோடி கோஷம் எழுந்தாலும்
கடவுள் இல்லை என்கிற
ஒரு சொல்
அதனுள் ஊடுருவி
கடவுளை பொய் செய்ய விரும்பும்
அந்த பொய்
நிஜத்தில்
எங்கோ கடவுள் இருக்கிறார்
என்கிற சிந்தனையை தூண்டி விடும்
நிஜ கடவுளை
தேட செய்து விடும்