Monday, July 20, 2015

தங்கமுகம்

திருக்கோவில் காரிருள் கருவறைக்குள்
மாவிளக்கு தீபத்தில் தங்கமுகம் கண்டேன்
தீப ஒளி கடந்து அவள் என்னை பார்த்த விழி  அழகு

என்ன அழகு அவள்
ஏந்தி நிற்கும் மார்பழகு
தாங்கி நிற்கும் இடை அழகு
கொடி அழகு அவள்
நடை அழகு
உடை அழகு

அவளுடன் நீ பழகு
என்றது மனம்

அவள் அப்படி ஒரு அழகு