Monday, July 20, 2015

அவள் அழகை

மயிர் இழை இடைவெளியில்
என்னருகில் அவள் அமர்ந்தாள்

அவள் அசைவுகளில்
நெருப்பென பற்றிக்கொண்டது மனம்

அவள் விடும் பெரும் மூச்சு காற்று
என் கன்னத்தில் அறைந்தது

என்னை கட்டுபடுத்திக்கொண்டேன்
அவள் முகம் பாராமல் தவிர்த்தேன்

காற்றில் அவள் வேர்வையீன் ஈரத்தை நுகர்ந்தேன்
 அதில் நான் முழுகி கரைந்தேன்

முடியவில்லை முடியவில்லை
திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டேன்
அவள் அழகை.