Friday, January 6, 2017

வாழ்கிறேன் பார்

கடந்து வந்த வாழ்க்கையில் திரும்ப பின்னுக்கு சென்று
தவறுகளை எல்லாம் திருத்த முடியாத நிலையில்
உன்முன் மன்னிப்பு பிச்சை கேட்டு நிற்கிறேன்
பாராய் முகமாய் என்னைவிட்டு
விலகி சென்றது ஏனோ.

இனி எனக்கு கைகொடுப்பார் யாரோ
தனியே தவியாய் தவித்தேன்

ஆண்டுகள் கடந்தும்
உன்னிடம் எனக்கு
கரிசனம் கிடைக்காததால்
நான் தொற்றுபோகவில்லை
மாறாக தட்டி தவழ்ந்து
பிழைத்து விட்டேன்

இனி வாழ்வேன்
சிறப்பாக மகிழ்வாக
வாழ்ந்து காட்டுவேன்

நீ பார்த்து வியக்கும்படி