Saturday, January 28, 2017

மௌன மொழியானாள்

விழியோடு விழி வைத்து
இமைகள் மூடி
இதழோடு இதழ் பதித்துவிட்டாள்

வேட்கம் தாங்காமலே
தள்ளி நின்று கைகளால் கண் மூடி கொண்டாள்

கண்மூடிய கைகளை விலக்கி பார்த்தேன்
முகம் மலர்ந்து நின்றாள்

கேள்வி கேளாமலே புன்னகையில் பதில் தந்தாள்
சொல்லை மொழியாமலே மௌன மொழியானாள்

ஏனோ என்னை மீண்டும்  கட்டியணைத்தாள்
வாய்பேச வாய்ப்பு தாராமலே வாய்யோடு வாய் வைத்து விட்டாள்.

சொக்கிய கண்களை திறந்து பார்த்தப்போது
திரும்பி பாராமலே ஓடி விட்டாள்.